அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரை!

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்க மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளை தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராமியச் சந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவதால் கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யவும், விவசாயிகள் அதிக விலையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வியாபாரம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.