இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,690 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஐஓசி போன்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறான எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் நிபந்தனை விதிப்பதாகவும் குறைந்த பட்சம் ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு கடன் அடிப்படையில் தமது நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.