எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - வழங்கப்படும் துறைகளை விளக்கிய பிரதமர் ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - வழங்கப்படும் துறைகளை விளக்கிய பிரதமர் ரணில்!

தாம் முன்னர் கூறியது போன்று எரிபொருளுக்கு மிகவும் கடினமான மூன்று வாரங்கள் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள தேவையில் 50 சதவீதத்திற்கு மாத்திரம் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம், பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகத்தை முன்னுரிமையாக வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளை 7 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அதன் பின்னர் எரிபொருள் கடன் வசதியை மேலும் நீட்டித்ததன் பின்னர் மேலும் 4 மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

நாளை (16) 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் கப்பல்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.