தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்ற தடை உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்ற தடை உத்தரவு!


14 நாட்களுக்கு எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கை அல்லது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதையும், அதன் மூலம் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்துவதையும் தடைசெய்யும் உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம பிறப்பித்தார்.

இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும், அது வரை பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.