அரிசி, கௌபி போன்ற தானியங்களை கூடுதல் விலைக்கு மொத்தமாக கொள்வனவு செய்யும் கொழும்பு தனவந்தர்கள்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரிசி, கௌபி போன்ற தானியங்களை கூடுதல் விலைக்கு மொத்தமாக கொள்வனவு செய்யும் கொழும்பு தனவந்தர்கள்!

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டில் பரவி வரும் வதந்திகளால், திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், புத்தள போன்ற பிரதேசங்களில் பல்வேறு விவசாயிகளிடம், சிலர் ஒரு கிலோ 165 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்தர்கள் இந்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கௌபி போன்ற தானியங்களை நாட்டில் நிலவும் விலையை விட அதிக விலை கொடுத்து மக்கள் வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. திஸ்ஸமஹாராம மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச மக்கள் தற்போது கிராமங்களில் சுற்றித் திரியும் வெளியாட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.