30 வருடங்களுக்கு பின் போட்டித் தொடரை கைப்பற்றிய இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 வருடங்களுக்கு பின் போட்டித் தொடரை கைப்பற்றிய இலங்கை!


சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியும் விளையாடிய ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. 

இலங்கை அணி சார்பாக சரித் அஸலங்க 110 ஓட்டங்களைப் பெற்றார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 எனும் விகிதத்தில் இலங்கை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த மண்ணில் 30 ஆண்டுகளின் பின்னர் இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் இலங்கை வென்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.