கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் உடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் உடல்!


வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியின் சடலம் கடந்த 30ஆம் திகதி இரவு கிணற்றொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுமி கடந்த 30ஆம் திகதி காலை டியூஷன் வகுப்புக்கு சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் இராணுவத்தினர் நேற்றைய முன்தினம் இரவு வரை கிணற்றை சோதனையிட்ட போது கிணற்றில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் சிறுமியின் சந்தேகத்திற்கு இடமான இரண்டு காலணிகள் காணப்பட்டன. 

சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 

எவ்வாறாயினும், மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கிணற்றில் தள்ளி விட்டார்களா என்பதை அறிய, சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.