நாளை முதல் ஜூலை 10 வரை இவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் ஜூலை 10 வரை இவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்!

நாளை (28) முதல் அடுத்த மாதம் (10) வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் தனியார் துறை வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும், இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.