காலி முகத்திடல் கலவரத்தை தடுக்காமைக்கான காரணம் இது தான் (VIDEO)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் கலவரத்தை தடுக்காமைக்கான காரணம் இது தான் (VIDEO)

காலி முகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி தமக்கு உத்தரவிட்டதாக கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவதை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொலைபேசி மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் 'கண்டுகொள்ளாமல் இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

காலி முகத்திடல் சம்பவத்திற்கு முன்னர், ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய போராட்டத்தை கலைக்க தாக்குதல் நடாத்த முன்னர், போராட்டத்தின் தலைவர் ஒருவரை அடையாளம் கண்டு, அவருடன் கலந்துரையாடி, தாம் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் கலந்துரையாடியதாகவும், அது பொலிஸ் சட்டங்களுக்கு அமைவாக இருந்ததாகவும் டி.ஐ.ஜி. மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.