இலங்கையில் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி!

தாய்லாந்தில் உள்ள சியாம் எரிவாயு நிறுவனத்திடம் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தாய்லாந்து நிறுவனத்திடம் இருந்து 01 வருட காலத்திற்கு எல்பி கேஸ் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எல்பிஜி கொள்வனவு செய்யப்பட வேண்டிய விலையானது, ஓமானில் இருந்து தற்போதைய வழங்குநரை விடவும் ஒரு மெட்ரிக் டொன்னுக்கு 09 அமெரிக்க டொலர்கள் குறைவாக காணப்படுகின்றது.

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் இலங்கையின் வருடாந்தம் 70% எரிவாயு தேவையை வழங்கும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.