![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDTmX5u1w_LXqIDrY6Vw9AsRjb-NR95MOFwrRRDItbJWT0NrL12GNXapvUg2o84BsiBGHs4zBI8RakDwZq7cXrlZRR1BwJTDlzCqKpk6QHvqWt-mKyc-19K8qq05qR4w_IWrJN7tuUI0Y/s16000/1651564639270126-0.png)
இதற்கு அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஆதரவு வழங்கும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மலிந்த ராஜபக்ச ஆட்சியை நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வரும் 11 ஆம் திகதி முதல் ராஜபக்ச ஆட்சி வீட்டுக்கு செல்லும் வரை தொடர் ஹர்த்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலில் அனைத்து அரச மற்றும் தனியார் துறை சேவைகளும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)