வெள்ளிக்கிழமை முதல் நாடு தழுவிய அனைத்து துறைகளிலும் ஹர்த்தால்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெள்ளிக்கிழமை முதல் நாடு தழுவிய அனைத்து துறைகளிலும் ஹர்த்தால்!!


எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நாடு முழுவதும் அனைத்துத் துறைகளும் ஹர்த்தால் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

இதற்கு அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஆதரவு வழங்கும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

ஊழல் மலிந்த ராஜபக்ச ஆட்சியை நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வரும் 11 ஆம் திகதி முதல் ராஜபக்ச ஆட்சி வீட்டுக்கு செல்லும் வரை தொடர் ஹர்த்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலில் அனைத்து அரச மற்றும் தனியார் துறை சேவைகளும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.