பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஹர்ஷ டி சில்வா ஒத்துளைப்பு வழங்க இணக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஹர்ஷ டி சில்வா ஒத்துளைப்பு வழங்க இணக்கம்!

நிதிக்குழுவின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்துக் கட்சிகளின் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்போம் என நம்புகிறோம் என்றார்.

பணம் மீதான முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது எனவும் நிதிக்குழுவின் அனுமதியின்றி எந்தவொரு பணச் சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகுவதற்கான காலவரையறையை ஜனாதிபதி அறிவிக்காத காரணத்தினால் தற்போது சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாது எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.