![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgef1USin410fKXQKGPgT2FgVaLh5oBtwUhYYPZup6Xr7vIGQuJXYPuBRuNtNATdFhfX8NG711WIGHBsLE1aZ6RQWkem400WRd7p5GU5xDMpe-dg4u80G4GAMIUfD9v5NR7PdRF1lLbNYb2oYQUzgiQOXggPUsXGCNZuywA7k8sjHKNZJ__yfPQwgByoQ/s16000/635014E5-C0FB-41EB-80E1-B4C5F0C072CB.webp)
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்ப குமார, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் பலரே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளும் மாத்திரமே வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்த நிலையில், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் ஆனால் அரசாங்க அமைச்சுப் பதவிகளை கோரக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கட்சித் தீர்மானத்திற்குப் புறம்பாக அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு இந்த பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்கு வெளியில் தீர்மானங்களை மேற்கொள்பவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள அடுத்த அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)