மின்தடை தொடர்பான புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்தடை தொடர்பான புதிய அறிவிப்பு!

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மின் விநியோத்தடை நேரத்தில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடையினை மேற்கொள்ளாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாலை 6.30 இற்கு பின்னர் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் அல்லது இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரையிலான மின்விநியோகத் தடையானது நண்பகல் முதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.