நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாதா?


இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (06) நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்படமாட்டாது என சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் செய்தியொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், குறித்த அறிவிப்பு பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் அல்லது பொது நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறான அறிவித்தல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் இந்த பொய்ப் பிரசாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.