இலங்கையர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க வேண்டும்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க வேண்டும்! -ஜனாதிபதி


ஜப்பானில் உள்ள வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்புகிறார். 

ஜப்பானில் முதியோர் பராமரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் 350,000 க்கும் மேற்பட்ட வேலை காலியிடங்கள் உள்ளன என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும். 

இதனையடுத்து, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட தனியார் மற்றும் அரச துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக நேற்று (25) முற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கு முகங்கொடுத்து, அந்நிய செலாவணியை உருவாக்கி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை கைப்பற்றுவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.