
பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில், பணம் அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், பணத்தை அச்சிட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது கடினமான வருடம் எனவும் இலங்கையின் அந்நிய செலாவணி மற்றும் அரசாங்க வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தான் பிரதமராக பதவியேற்ற ஒவ்வொரு முறையும் மக்களுக்கு மூன்று வேளை உணவு உண்ணும் வாய்ப்பை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)