சஜித் ஒரு பைத்தியக்காரன்.. அவரது உச்சம் தலை முதல் கால் வரை வெறும் முட்டாள்தனம் மாத்திரமே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் ஒரு பைத்தியக்காரன்.. அவரது உச்சம் தலை முதல் கால் வரை வெறும் முட்டாள்தனம் மாத்திரமே!


இந்த தருணத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பை திருத்தவோ அல்லது தேர்தலை நடத்தவோ முயற்சித்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

நாட்டைக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டுமென அவர் கூறுகிறார். 

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இணைய சேனலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாத்திரத்தை விமர்சித்த பாலித ரங்கே பண்டார, பெருவிரலில் இருந்து தலை உச்சி வரை செல்வது சஜித் பிரேமதாசவின் முட்டாள்தனம் மட்டுமே இருக்கிரது எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திய சஜித் பிரேமதாசவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.