நாட்டில் எரிபொருள் கையிறுப்பு பற்றிய அறிவிப்பு - வரையறுக்கப்பட்ட டீசல் விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் எரிபொருள் கையிறுப்பு பற்றிய அறிவிப்பு - வரையறுக்கப்பட்ட டீசல் விநியோகம்!

நாட்டில் எரிபொருள் இருப்பு பற்றிய புதுப்பிப்பை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  வழங்கியுள்ளார்.

தினமும் சராசரியாக 4000 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசலும், 2500 மெட்ரிக் டொன் 92 பெற்றோலும் வெளியிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அதிகளவிலான பெற்றோல் 92 கையிருப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீளமைக்கப்படும் வரை குறைந்த அளவிலான ஆட்டோ டீசல் மாத்திரமே விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் திங்கட்கிழமை (9) இறக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 12,516 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசல் மற்றும் 27,325 மெட்ரிக் டொன் பெட்ரோல் 92 கையிருப்பில் இருந்த நிலையில், 425 மெட்ரிக் டன் பெட்ரோல் 95 மட்டுமே மீதம் இருந்தது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.