சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் 40 எரிவாயு சிலிண்டர்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 20 எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் 20 வெற்று சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், சந்தை விலையை விட இரண்டு மடங்கு விலை ரூ. 9260 இற்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அன்ஸ்லம் த சில்வாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இரகசியப் புலனாய்வாளர் ஒருவர் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக களமிறக்கப்பட்டு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.