தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இதில் கடமை தவறிய அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட சகலரையும் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்பாக.
பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் முடிவுகளினால் முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனை குற்றமாக கருதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)