கையிருப்பில் டொலர் இல்லை - பல நாட்களாக எரிவாயு கப்பல் கடலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கையிருப்பில் டொலர் இல்லை - பல நாட்களாக எரிவாயு கப்பல் கடலில்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 3,500 தொன் எரிவாயு கப்பலுக்கு செலுத்துவதற்கு டொலர்கள் இல்லை என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.

இதனால் எரிவாயு கையிருப்பு பல நாட்களாக வெளிவர முடியாமல் கடலில் தேங்கி கிடப்பதாக நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த எரிவாயு கையிருப்பை விடுவிப்பதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு நிதியமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் இதுவரை அந்த கலந்துரையாடல்களும் வெற்றிபெறவில்லை.

இன்றும் நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயுவிற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர் மேலும் சில பிரதேசங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.