பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருள்??? - எரிசக்தி அமைச்சர் காஞ்சன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருள்??? - எரிசக்தி அமைச்சர் காஞ்சன

பொதுமக்களின் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்துகொண்டாலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் விலைகள் வழங்கப்படுவதாக பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டிவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தற்போது வழங்கப்படும் சந்தை விலையை விட, இரு தரப்பிலிருந்தும் அல்லது யாருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் காரேஜில் உள்ள எரிபொருள் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும, இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு யாருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் நீட்டிக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.