எம்.பி அலி சப்ரியின் கார் மோதியதில் நபரொருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்.பி அலி சப்ரியின் கார் மோதியதில் நபரொருவர் பலி!


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் மோட்டார் காரில் மோதி பாதசாரி ஒருவர் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளார். 

பாலாவி-கல்பிட்டி வீதியில் மாம்புரி என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி இருந்ததாக நொரோச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய புத்தளம், மந்தீவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக எம்பியின் காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.