அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்காக விசேட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்காக விசேட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!


அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் வகையில், தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய  சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.