நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு அவசரகாலச் சட்டம் அல்ல - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு அவசரகாலச் சட்டம் அல்ல - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் நேற்று (06) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அவசரகாலச் சட்டம் தீர்வாகாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடும் மக்களும் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியையும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் அங்கம் வகிக்கும் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.