நாட்டின் புதிய பிரதமராக ரணில் - பாராளுமன்றத்தில் மொட்டு சின்ன கட்சியின் ஆதரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் புதிய பிரதமராக ரணில் - பாராளுமன்றத்தில் மொட்டு சின்ன கட்சியின் ஆதரவு!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முடியும்.

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தினை தொடர்ந்து, திங்கள்கிழமை பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் பதவி வெற்றிடமாக இருப்பதுடன், ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான அரசியல் முட்டுக்கட்டையும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் காரணமாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துள்ளன. (யாழ் நியூஸ்)

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.