கப்பல் வந்தாலும் கையிருப்பில் டொலர்கள் இல்லை - டீசல், பெற்றோல் தட்டுப்பாடு மிக விரைவில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கப்பல் வந்தாலும் கையிருப்பில் டொலர்கள் இல்லை - டீசல், பெற்றோல் தட்டுப்பாடு மிக விரைவில்!

கூட்டுத்தாபனம் எச்சரிக்கிறது

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது டீசல் மற்றும் பெற்றோல் இருப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள டீசல் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 70,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் வந்த கப்பல், 37,500 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் மற்றும் சுமார் 26,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதிலும், எரிபொருளை இறக்குவதற்கு டொலர்கள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடனுதவியின் கீழ் இரண்டு டீசல் கப்பல்கள் மே 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளன. டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு அவற்றை வழங்க முடியாது என்றும் அதனால் மின்வெட்டு அதிகரிக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.