காலி முகத் திடலில் ஏற்பட்ட அமைதியின்மை; ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்ய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத் திடலில் ஏற்பட்ட அமைதியின்மை; ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்ய உத்தரவு!


ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பிலே வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் அடங்குவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.