மே 18 இலங்கையை LTTE தாக்குவதாக இந்திய புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மே 18 இலங்கையை LTTE தாக்குவதாக இந்திய புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது!

ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தாக்குதலை நடத்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் படைகளில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக இரண்டு முறை அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய நிலையில், சர்வதேசத் தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள், போராட்டக்காரர்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தனது பணியைத் தொடங்க முயற்சித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கொண்டாட்டத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக முன்னாள் புலிகள் குழுவொன்று ஏற்கனவே தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், தமிழ்நாடு கடலோர காவல்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.