VIDEO: மிரிஹான சம்பவத்தின் போது பஸ் இனை எரித்தவர் இவர்கள் தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: மிரிஹான சம்பவத்தின் போது பஸ் இனை எரித்தவர் இவர்கள் தான்!

மிரிஹான மோதலின் வாகனங்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த கலவரத்திற்கு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரும் காரணம் என்றும் அவர் கூறினார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது எனவும், நாட்டை உருவாக்க முடியாவிட்டால் அரசாங்கத்தை கையளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுனில் வட்டகலவும் கலந்துகொண்டார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.