advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாளைய மின்வெட்டு கோரிக்கையை நிராகரித்த PUCSL!!


நாளைய தினம் (04) இலங்கை மின்சார சபை கோரிய 07 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர இடைவெளிகளில் 05 மணி நேரத்திற்கும் குறைவாக, அதாவது பகல் நேரத்தில் 03 அல்லது 04 மணிநேரமும், இரவு 10 மணிக்கு முன்னதாக 1 அல்லது 2 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 


அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 முதல் 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 முதல் 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.