இடைக்கால அரசாங்கத்திலும் நானே இந்நாட்டின் பிரதமர் - மகிந்த ராஜபக்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இடைக்கால அரசாங்கத்திலும் நானே இந்நாட்டின் பிரதமர் - மகிந்த ராஜபக்ச

இடைக்கால அரசாங்கத்திலும் தானே பிரதமர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை இல்லாவிட்டாலும் இடைக்கால அரசுகள் எப்படி அமைக்கப்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரலாறு தெரியாத ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே தன்னை பதவி விலகுமாறு கூறியதாக கூறிய அவர், பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் பலம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றில் நாடு இன்னும் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறு செய்யாவிட்டால் தொடர்ந்தும் அவர்களுக்கு போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.