அராஜக வாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அராஜக வாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது


அராஜக வாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கீழ் நாட்டில் ஆட்சி நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (26) மாலை அலரிமாளிகையில் ஸ்ரீலங்கா அமரபுர பிரிவின் பிரதான சங்கநாயகமாக கடமையாற்றும் ஓமல்பே சோபித தேரரை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அமைதியான பொதுப் போராட்டத்தில் பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினருடன் தேரர் அண்மையில் இணைந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது, ​​இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் கையளித்த கடிதம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சோபித தேரருக்கு அறிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அனைத்து அரசியல் கட்சிகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய அனைத்து மதத் தலைவர்களின் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்று கூறிய பிரதமர், நாடு அராஜகவாதத்தை நோக்கி செல்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித தேரர், புதிய பிரதமர் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் தெரிவித்தார்.

தனது இராஜினாமாவைத் தொடர்ந்து மாற்று நபரை நியமிப்பதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும், இது நாட்டை அராஜகவாதத்தை நோக்கிச் செல்ல வழிவகுக்கும் எனவும் தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நாட்டை ஆள முடியாது என பிரதமர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.