இந்­தியா, இலங்கை இடையே கடல்­வழி மின்­பாதை அமைக்­கும் திட்­டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்­தியா, இலங்கை இடையே கடல்­வழி மின்­பாதை அமைக்­கும் திட்­டம்!

இந்­தியா, இலங்கை இடையே கடல்­வழி மின்­பாதை அமைக்­கும் திட்­டத்­தைக் கைவிட வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், இலங்­கைக்கு செய்­யப்­படும் உத­வி­கள் ஒருபோதும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக அமைந்து விடக்கூடாது என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மின்­பாதை அமைக்­கும் திட்டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் அது இந்­தி­யா­வின் வளர்ச்­சியை பாதிக்­கும் என்­பதை அரசு உணர வேண்­டும் என்­றும் கடந்த 20 ஆண்­டு­களில் இரு­முறை கைவி­டப்­பட்ட இந்­தியா - இலங்கை மின்­பாதை திட்­டத்தை மீண்­டும் செயல்­ப­டுத்த முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது தேவை­யற்ற நட­வ­டிக்கை என்­றும் ராமதாஸ் தெரி­வித்­துள்­ளார்.

“இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் மின்­சா­ரத்தை இலங்­கைக்கு கொண்டு செல்­வ­தற்கு வச­தி­யாக மது­ரை­யி­ல் இ­ருந்து இலங்கை­யின் அனு­ரா­த­பு­ரம் பகுதிக்கு கடல் வழி­யாக மின்­பாதை அமைக்­கும் திட்­டம் நீண்ட கால­மாக இரு நாடு­க­ளின் பரி­சீ­ல­னை­யில் இருந்து வரு­கிறது.

“தமி­ழ­கத்­தில் கடு­மை­யான எதிர்ப்பு எழுந்­த­தால் அத்­திட்­டம் கைவி­டப்­பட்­டது. இந்த முயற்சி பொது­வாக இந்­திய நல­னுக்­கும், குறிப்­பாக தமி­ழ­கத்­தின் வளர்ச்சிக்­கும் பாத­க­மாக அமை­யும் என்­பதே உண்மை,” என்று ராம­தாஸ் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.

மீண்டும் பழைய திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.