advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரமழான் பண்டிகையன்று மின்தடை தொடர்பான அறிவிப்பு!


நாட்டில் A முதல் W வரையான வலயங்களில் இன்றைய தினம் (30) 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

கொழும்பு நகர்ப்பகுதிகளில் காலை 6.00 மணிமுதல் 9.00 மணி வரையான 3 மணிநேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது

இதேவேளை, நாளையும், எதிர்வரும் மூன்றாம் திகதியும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் இரண்டாம் மற்றும் நான்காம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும்.

இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.