மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தமது பரிந்துரைகளுடன் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.