அரசில் இருந்து விலகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசில் இருந்து விலகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்!

ராஜபக்ச ஆட்சிக்கு ஆதரவளித்த மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது தீர்மானங்களை அறிவித்து, தற்போதைய ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தனர்.

எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.