![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwu6T4xL_3Ae5zfah1xPo6n3QoEXiWCSJ4lE3AD84GJ1ch5i_fW31E7r3uyOLeZ6M7J9_8hphzxH1IQGSaFQkeauc05uSEicUxE2jK3XmRPx45K9NyDnCnxhs34cWDJz8OutXzrqE2ERTGqvQHamL8eUNQgRh0rM2mvZ5oggutdYSRK8LResOOBudNtg/w640-h421/AB8CE4C1-51E8-4DA3-9684-085A7920611B.jpeg)
பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமது தீர்மானங்களை அறிவித்து, தற்போதைய ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர்.
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தனர்.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். (யாழ் நியூஸ்)