மிரிஹான ஆர்ப்பாட்டம் - யாரந்த தீவிரவாதிகள் ? அரசின் பதில் இதோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிரிஹான ஆர்ப்பாட்டம் - யாரந்த தீவிரவாதிகள் ? அரசின் பதில் இதோ!

 
நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இல்லத்தில் இருந்ததாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். 

பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி தனது இல்லத்தில்


இல்லை என முன்னர் பல்வேறு செய்திகள் கூறப்பட்ட போதிலும், அவர் தகவலை உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி விசேட பாதுகாப்பின் கீழ் தனது வீட்டிற்குள் இருந்ததாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார். 

"தீவிரவாத குழுக்களால்" போராட்டம் கட்டுக்கடங்காததாக மாறியதாக கூறிய அவர், போராட்டம் குறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேலும் தெளிவுபடுத்தினார். ‘தீவிரவாதி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரசாங்கம் மதத் தீவிரவாதிகளை குறிப்பிடவில்லை என்று கூறினார். 

அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளை குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெளிவுபடுத்தினார். 

இதேவேளை, 'தீவிரவாதி' என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, 'பயங்கரவாதிகள்' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார், பயங்கரவாதிகள் மட்டுமே வாகனங்களுக்கு தீ வைத்தனர். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் பயங்கரவாதிகள் இருக்கின்றார்களா என வினவியபோது, ​​நாட்டில் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்களுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்தார். 

பொதுமக்களின் போராட்டத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அவ்வாறான அசம்பாவிதங்களின் போது தடுக்க முடியாது. எவ்வாறாயினும், இவ்வாறான துரதிஷ்டமான சூழ்நிலைகளின் போது ஊடகவியலாளர்களின் ஊடக உரிமைகள் பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். 

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இராணுவம் எதிர்காலத்தில் அனுப்பப்படுமா என வினவியபோது, ​​அது தேசிய பாதுகாப்பின் தேவைகளைப் பொறுத்தே அமையும் என அமைச்சர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக அவர் கூறினார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் படைகள் செயற்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு இதுவே ஒரே வழி எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.