![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM5UT2MEYk4fbBaDy6CLOPP3rR33HR8qHNhKsEHI9EQ33Xms6jyVQVpw5ktB3Cej5gpfMreiCXMV9_AabO5Gx3_5W5RCHxt752-DBWXo5--8qCQixpadQZA-B1bchv3pYbl2I3aR7K3P6l4gaOWFkgZCgjqYDpSO8cl77dcuRiKF7BM0WnL5hloZko/s16000/fd.jpeg)
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து Gowers Corporate நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலானது.
குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அன்றைய தினம் அவர் முன்னிலையாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி மாரப்பன மன்றில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)