மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சனத் வெளியிட்டுள்ள கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சனத் வெளியிட்டுள்ள கருத்து!


நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இலங்கை தேசிய அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய கருத்து தெரிவித்துள்ளார். 


அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார்.


"கடந்த ஒரு மாத காலமாக இலங்கையர்களாகிய நாங்கள் மௌனமாக தவித்து வருகிறோம். எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் ஒரு முறிவு புள்ளி உள்ளது. அந்த நிலைக்கு வந்துவிட்டோம். நேற்றைய போராட்டங்கள் அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் அநியாய ஒடுக்குமுறையின் விளைவாகும். 


இனம், மதம், சாதி, கட்சி அரசியலால் ஒருபோதும் பிளவுபட மாட்டோம். 


ஒரே மக்களாக ஒன்றுபட்டு நமக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் எழுந்து நிற்போம்.


 #WakeUpSriLanka 


இது எங்களைப் பற்றியது, அவர்களைப் பற்றியது அல்ல, அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள், உங்கள் சகோதர சகோதரிகளுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இது கலவரம் அல்ல, வெறும் கருத்து வெளிப்பாடு" என தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.