லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை!

3,600 மெட்ரிக் தொன் (MT) சமையல் எரிவாயு (LPG) கொண்ட கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த கப்பல் இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விநியோகம் நாளை ஆரம்பமாகும் என இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட 3,600 மெட்ரிக் டன் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரும் என்று நிறுவனம் மேலும் கூறியது.

வெள்ளிக்கிழமை, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நேற்று ஏப்ரல் 25 வரை இடைநிறுத்தியிருந்தது.

இன்று வந்த 3,600 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் வருவதற்கு நிறுவனம் காத்திருந்தமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.