“தான் 2017 இல் செய்ததை போன்று அனைவரும் தமது சொத்துக்களை அறிவிக்க வேண்டும்”- பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிர்யெல்ல கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“தான் 2017 இல் செய்ததை போன்று அனைவரும் தமது சொத்துக்களை அறிவிக்க வேண்டும்”- பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிர்யெல்ல கோரிக்கை!

அனைத்து அரசியல்வாதிகளும் தமது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் எனவும், அனைத்து அரசியல்வாதிகளின் உள்ளூர் மற்றும் சர்வதேச சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சி பிரதம உறுப்பினராக இருக்கும் கிரியெல்ல, 2017ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பில் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறாத நிலையில், தாம் வாய்மொழியாக தனது சொத்துக்களை பாராளுமன்றத்தில் அறிவித்ததாக மீண்டும் வலியுறுத்தினார்.

அனைத்து அரசியல்வாதிகளும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தியதோடு, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்த திட்டத்தை பின்பற்றி தமது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.