காவல்துறையினரிடம் 100 மில்லியன் அபராதம் கோரிய சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காவல்துறையினரிடம் 100 மில்லியன் அபராதம் கோரிய சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார!

சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார, தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்ததற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தை இயக்கியதற்காக பண்டார, மோதர குற்றப் பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர் திடீரெனக் காணாமல் போனதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதை மோதர குற்றப் பிரிவினர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றத்திடம் தீர்ப்பு வழங்கக் கோரி நேற்று மனுவொன்றை தாக்கல் அனுருத்த பண்டார செய்துள்ளார்.

மேலும், சமூக வலைதள ஆர்வலரான பண்டார காவல்துறையினரிடம் இழப்பீடாக ரூ.100 மில்லியன் அவரது மனு மூலம் கோரியுமுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.