நாம் IMFக்கு சவால் விட்டோம்! -நிதி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் IMFக்கு சவால் விட்டோம்! -நிதி அமைச்சர்


இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள ஆரம்ப அறிக்கை தொடர்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அடிப்படை விளக்கத்தை அனுப்பியுள்ளதாகவும், தனது கருத்துக்களை நிதியமைச்சகத்திடமும் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நிதியமைச்சர் என்ற வகையில் இறுதி ஆவணத்தை மாத்திரம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.