கடத்தலுக்கு ஆயத்தமாக இருந்த 600 கோடி பெறுமதியான கோகைன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடத்தலுக்கு ஆயத்தமாக இருந்த 600 கோடி பெறுமதியான கோகைன்!


கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 350 கிலோகிராம் கோகைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த கோகைன் மீட்கப்பட்டுள்ளது.


இந்த கோகைனின் இலங்கை சந்தைப் பெறுமதி 600 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


பனாமாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கோகைன் மீட்கப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சுங்க தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.


இந்த கோகைன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.