advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையே பேச்சுவார்த்தை!


சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.


இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார பின்னடைவு, நாணய கையிருப்பு மற்றும் பணவீக்கம் என்பனவற்றை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்கள பணிப்பாளர் சங்யொங் ரீ இணை நிதி அமைச்சர், திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர்.


இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாணய கையிருப்பினை அதிகரித்தல் மற்றும் நிலையான பாதையில் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.