புதிய எதிர்கட்சி ஒன்றினை உருவாக்கவுள்ள வீரவன்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய எதிர்கட்சி ஒன்றினை உருவாக்கவுள்ள வீரவன்ச!


முன்னாள் அமைச்சரும் அரச பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு தொலைக்காட்சி நேரலையில் உரையாற்றிய வீரவன்ச, தானும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் தற்போது பாராளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.க்களாக அமர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

 நீங்கள் இப்போது எதிர்க்கட்சி உறுப்பினரா என்று கேட்டதற்கு, வீரவன்ச "இன்னும் இல்லை" என்று பதிலளித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியில் இருப்பதாக அவர் கூறினார். 

எதிர்க்கட்சியில் புதிய குழுவொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், அதில் பலர் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

மேலும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கமாகும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார். 

அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தால் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.