அரசிற்கு அதிர்ச்சி கொடுக்கவிருக்கும் அமைச்சர் வாசுதேவ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசிற்கு அதிர்ச்சி கொடுக்கவிருக்கும் அமைச்சர் வாசுதேவ!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அபிவிருத்தி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த வாரத்தில் அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனத்தை ஏற்கனவே அமைச்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

பட்டி வீரகோனுக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தனது அமைச்சுப் பதவி ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கான சரியான நிலைப்பாடு இதுவாக இருந்தாலும், அது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நாணயக்கார கூறினார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.

ஏற்கனவே அமைச்சுப்பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடடைக் கொண்ட வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சு பதயிலிருந்து ஒதுங்கியிருக்ப்போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.