நிதியமைச்சர் பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிதியமைச்சர் பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!


நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கெனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அதன் நிர்வாகம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பில் பராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி முகாமைத்துவக் குழுவும் கலந்துரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.